கோவையில் திருமண விழாவுக்கு வந்த இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம்: ஊட்டி வாலிபருக்கு தர்மஅடி…!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று கோவையில் நடந்த உறவினர் திருமண விழாவுக்கு வந்தார்.
விழாவுக்கு வந்திருந்தவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஊட்டி வாலிபர், தனது உறவுக்காரர் ஒருவரின் 5 வயது மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.
பின்னர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டவாறு வாலிபரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். சிறுமி கண்ணீர் மல்க வருவதை பார்த்த குடும்பத்தினர் அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறினார்.
இதைக்கேட்டு ஆவேசமடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பெரியவர்கள் அவர்களை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து சில்மிஷ வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Average Rating