16 வயது மகளை ஏழு மாத கர்ப்பிணியாக்கி தந்தை…!!

Read Time:2 Minute, 19 Second

manavi1-680x365பாட­சா­லையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாண­வி­யான தனது மகளை ஆறு மாத கர்ப்­பி­ணி­யாக்­கி­விட்டு தந்தை ஒருவர் தலை­ம­றை­வான சம்­பவம் புத்­தளம், மணல்­குன்று பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

புத்­தளம், பிர­தே­சத்தைச் சேர்ந்த 45 வய­தான ஒரு­வரே தலை­ம­றை­வா­கி­யுள்ள சந்­தேக நப­ராவார். 16 வய­தான பாதிக்­கப்­பட்ட சிறுமி இந்த வருடம் சாதா­ரண தரப் பரீட்சை எழுத இருப்­ப­வ­ராவார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட மாண­வியின் தாயார் புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரிய­வ­ரு­வ­தா­வது, பாதிக்­கப்­பட்ட மாண­வியின் பெற்றோர் காதி நீதி­மன்றில் கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் விவா­க­ரத்து பெற்­ற­வர்­க­ளாவர்.

இந்தச் சிறுமி தம்பி, அவரின் தங்கை, தந்­தை­யுடன் தனி­யாக வசித்து வந்­துள்­ளார். சந்­தேக நப­ரான தந்தை தனது மூத்த மக­ளான சிறு­மியை நீண்ட கால­மாக பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்து வந்­துள்ளார் என தெரிய வரு­கி­றது. இந்­நி­லையில், சிறுமி நோய் வாய்ப்­பட்­டுள்ளார்.

சிறு­மியின் பாட்­டியும் தந்­தையின் மூத்த சகோ­த­ரியும் சிறு­மியை வைத்­தியர் ஒரு­வ­ரிடம் அழைத்துச் சென்று பரி­சோ­தனை செய்­த­போது சிறுமி ஏழு மாத கர்ப்­பி­ணி­யாக இருப்­பது தெரிய வந்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட சிறுமி வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ள நீருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!!
Next post அமெரிக்க சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்ட நாள் அக்டோபர் 29: சுவாரசியமான பின்னணி…!!