வீட்டில் அடைத்து வைத்து கும்பலால் மனைவி கற்பழிப்பு; வரதட்சணை பணத்துக்காக கணவன் செய்த வெறித்தனம்!!
வரதட்சணைக்காக, பெண்கள் எவ்வளவோ சித்ரவதை அனுபவிக்க வேண்டியிருக் கிறது. ஆனால், வரதட்சணை பணம் பெற்று வரவில்லை என்பதற்காக, சொந்த கணவராலேயே, பலரால் கற்பழிக்கப்பட்ட கொடுமையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உ.பி., மாநிலம் துஜனாவில் வசிப் பவர் அந்த கொடுமைக்கார கணவர்; பெயர் பிரதாப். தனது மகளை பார்ப்பதற்காக துஜனா வந்தார் பெண்ணின் தந்தை. அப்போது, அந்த பெண், டாட்ரி நகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவரம் தெரியவந்தது. அங்கு சென்று பார்த்த போது, தனது நிலையை கண்ணீருடன் தெரிவித்தார் அந்தப் பெண்.ரூ.இரண்டு லட்சம் வரதட்சணைப் பணம் கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் பெண்ணின் கணவர் பிரதாப். இதற்கு அந்த பெண் மறுக்கவே, துஜனாவில் இருந்து, டாட்ரியில் உள்ள நவீன் என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பெண்ணுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக, நவீன், சதேந்திரா, ஞானேந்திரா, மகேஷ், சஞ்சய் ஆகியோரை விட்டு கற்பழிக்க செய்தார் பிரதாப். அத்துடன் கொடுமை நிற்கவில்லை. டாட்ரி மட்டுமின்றி, முசாபர் நகர், காசியாபாத்தில் உள்ள கோவிந்த்புரம் ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப் பட்டு, பலராலும் கற்பழிக்கப்பட்டார். 15க்கும் மேற்பட்டோரால், கடந்த ஒரு மாதமாக பலமுறை கற்பழிக்கப் பட்டுள்ளார் அந்தப் பெண்.தனது மகளின் கண்ணீர் கதையை கேட்டு, அதிர்ந்து போய் விட்டார் அந்த தந்தை.
இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். வழக்கம் போல, போலீசார் அலட்சியம் காட்டவே, மீரட் மண்டல ஐ.ஜி., வி.கே.குப்தாவிடம் முறையிட்டார். இதைத் தொடர்ந்து நடவடிக்கைக்கு உத்தரவிடவே, அந்தப் பெண் மீட்கப்பட்டு, மீரட்டில் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.ஆனால், பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவோ, பெண்ணின் கணவர் பிரதாப்பை கைது செய்யவோ இல்லை. கேட்ட போது, நொய்டா போலீசாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.