சேலம் பஸ் ஸ்டாண்டில் அனாதையாக கைவிடப்பட்ட 8 மாத பெண் குழந்தை..!!
Read Time:56 Second
சேலம் மாவட்டம், சேலம் நகரில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் தாயால் கைவிடப்பட்ட நிலையில் அனாதையாக கிடந்த 8 மாத பெண் குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அருகாமையில் ஒரு பால் பாட்டிலுடன் அந்த குழந்தை அழுதுகொண்டிருந்ததை கண்ட பூ விற்கும் பெண்மணி அதை அள்ளியணைத்து, தூக்கிவந்து, இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.
நேற்றிரவுவரை அந்த குழந்தைக்கு உரிமைகோரி யாருமே வராததால் சேலத்தில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்பிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating