வேலைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீட்டு உரிமையாளர் மகன் கைது..!!
Read Time:1 Minute, 24 Second
ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள விஜயநகர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்துவந்த 14 வயது சிறுமி இங்குள்ள ஹுமாயூன் நகர் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் திடுக்கிடும் புகார் அளித்தார்.
நானும் எனது 13 வயது தங்கையும், மற்றொரு 9 வயது தங்கையும் விஜயநகர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து எடுபிடி வேலைகள் செய்து வருகிறோம். அந்த வீட்டு உரிமையாளரின் மகன் என் 13 வயது தங்கையை கற்பழித்து விட்டார்.
மேலும், என்னையும் பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார் என அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, விஜயநகர் காலனியில் உள்ள அந்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்த அந்தப் பெண்ணின் இரு தங்கைகளையும் விடுவித்த போலீசார், வீட்டு உரிமையாளரின் மகனான ரிஸ்வான் என்பவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating