பெண் குழந்தையை வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைத்திருந்த தாய்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)…!!
பிறந்த பெண் குழந்தையை வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைத்திருந்த தாயின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் கம்பூங் உலு துலாக் கேசில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இப்பெண்ணுக்கு 5வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது, இவர் இக்குழந்தையை வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைத்துள்ளார்.
2 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மாமனாருக்கு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு குளியறைக்கு சென்று பார்த்தபோது அங்கு வாஷிங்மெஷினுக்குள் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்சியடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, குழந்தையின் எடை 2,86 கிலோ இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாயாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து மாமானார் ஷனுல் ஹமீத் கூறியதாவது, எங்கள் மருமகள் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு தெரியாது, நாங்கள் அவரிடம் இருந்து குழந்தையை எதிர்ப்பாக்கவில்லை என்றும் தற்போது அவருக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எனக்கூறியுள்ளார்.
ஆனால், அக்குழந்தை தனது கணவருக்கு பிறந்ததுதான் என டிஎன்ஏ பரிசோதனை மூலம் அப்பெண் நிரூபித்துள்ளார்.
தற்போது இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating