காவலர் மீது மனைவி புகார்

Read Time:1 Minute, 6 Second

காவலர் ஒருவர் தனது மூன்றரை வயது மகனை கடத்திச் சென்று விட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் வசந்தி (வயது 28). இவரது கணவர் பெயர் ராமன். இவர் காவலராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு விக்னேஷ் (வயது 3) என்ற மகன் உள்ளான். தீபாவளியின் போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ராமன் தனது மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வசந்தி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தான் அதிபர் முஷரப் இன்று சவுதி அரேபியா செல்கிறார்; மன்னருடன் ஆலோசனை நடத்துகிறார்
Next post ஆப்கானிஸ்தானில்: தற்கொலை தாக்குதலில் கவர்னர் மகன் பலி