கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் கொலை..!!
Read Time:57 Second
மாத்தறை திஹகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 12 வயது சிறுவனொருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை திஹகொடை கபுவத்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த கொலை இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
Average Rating