பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 15 பேர் பலி…!!
Read Time:52 Second
பிலிப்பைன்ஸ் நாட்டின் துறைமுக நகரமான ஷாம்போங்காவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இன்று அதிகாலை மார்க்கெட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இதனால், அந்த கட்டிடத்தில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர்.
போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
Average Rating