ஆப்கானிஸ்தானில்: தற்கொலை தாக்குதலில் கவர்னர் மகன் பலி
Read Time:57 Second
ஆப்கானிஸ்தானில் நிம்ரஸ் மாநில கவர்னர் ஈரான் எல்லை அருகே உள்ள ஜாரஞ்ச் நகருக்கு சென்றார். அவருடன் அவரது மகனும் சென்றார். கவர்னரை கொல்லவேண்டும் என்ற திட்டத்துடன் ஒரு தற்கொலை தீவிரவாதி வழியில் அவரது காரை மறித்து தற்கொலை தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் கவர்னர் தப்பி விட்டார். ஆனால் அவருடைய மகன் இந்த தாக்குதலுக்கு பலியானார். கவர்னரின் பாதுகாப்புக்காக சென்ற 6 போலீஸ்காரர்களும் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். தலீபான் தீவிரவாதிகள் இந்த ஆண்டு மட்டும் 140 தற்கொலை தாக்குதல்கள் நடத்தினார்கள். இதில் 200 பேர் பலியானார்கள்.