சீனாவில் புயல்மழைக்கு 97 பேர் பலி
Read Time:53 Second
சீனாவை பிளிஸ் என்ற புயல் தாக்கியது. இந்தப்புயல் பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளைத் தாக்கி விட்டு சீனாவைத்தாக்கியது. இதில் 97 பேர் பலியானார்கள். ஹுனான் மாநிலத்தில் தான் பலத்தசேதம் ஏற்பட்டு உள்ளது. 31 ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 78 பேர்பலியானார்கள். பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் பீஜிங்- குவாங்ஷவ் ரெயில்பாதையை துண்டித்து விட்டது. இதனால் 5 ஆயிரம் பயணிகள் பயணத்தை தொடரமுடியாமல் தவித்தனர். இந்த மாநிலத்தில் உள்ள ஒரு அணைக்கட்டு எந்த நேரமும் உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.