லலித், குகன் விசாரணை தொடர்பான பொறுப்பை ஏற்ற அமைச்சர் மனோ…!!

Read Time:2 Minute, 40 Second

hqdefaultமனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சம்பவம் தொடர்பான சகல விசாரணைகளையும் துரிதமாகவும் வினை்திறனாகவும் நிறைவு செய்யும் பொறுப்பை தான் ஏற்பதாக தேசிய உரையாடல்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
லலித் குமாரின் தந்தையான ஆறுமுகம் வீரராஜிடம் நேற்று அமைச்சர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

லலித் குகன் என்ற தனது மகன் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளுமாறும் அந்த விசாரணைகளில் தற்போதைய நிலையை தனக்கு அறிய தருமாறு கோரி வீரராஜ் அமைச்சரிடம் கடிதம் ஒன்றை கையளித்தார்.

லலித் தொடர்பான எதிர்பார்ப்பை கைவிட வேண்டாம் எனவும் அவர்களை தேடும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் மனோ கணேசன், லலித் குமார் தந்தையிடம் கூறியுள்ளார்.

லலித் குமாருக்கு இன்று 34 வயதாகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால உறுப்பினாக இருந்த லலித், பின்னர் அதில் இருந்து விலகி முன்னிலை சோசலிசக் கட்கியை உருவாக்க பங்களிப்பை வழங்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த காணாமல் போகும் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த லலித் குமாரை யாழ்ப்பாணத்தில் இருந்து அவரது தந்தைக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன் இதற்கு பின்னரே லலித் குமார் காணாமல் போனார்.

தனது மகன் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி அடுத்த வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடிதங்களை கையளிக்க உள்ளதாகவும் ஆறுமுகம் வீரராஜ் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போனவர் சடலமாக மீட்பு…!!
Next post உங்களிடமும் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? – ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயம்…!!