ஈராக்கில் 4 குர்தீஸ் ராணுவ வீரர்கள் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்…!!

Read Time:1 Minute, 46 Second

66aa95d0-aaea-4b85-899c-c226f7ca87d4_S_secvpfஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ள பகுதியில் குர்தீஸ் படையினருடன் சேர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் எதிர்பாராத விதத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி 70 குர்தீஸ் பிணைக் கைதிகளை மீட்டனர்.

இதனால் குர்தீஸ் படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் குர்தீஸ் படை வீரர்களுடன் நடந்த போர்க் காட்சிகள் இடம் பெற்றன. அத்துடன் தங்களிடம் பிணைக்கைதிகளாக இருந்த 4 குர்தீஸ் பெஷ்மெர்கா ராணுவ வீரர்களின் தலை துண்டித்து படுகொலை செய்யும் காட்சிகளும் இருந்தன.

வீடியோவில், ஆரஞ்சு நிற உடை அணிந்த 4 பிணைக்கைதிகளும் கைகள் பின்புறம் கட்டப்பட்டு முழங்காலிட்டு உள்ளனர். அவர்களின் பின்புறம் முகமூடி அணிந்து கையில் கத்தியுடன் நிற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களின் தலை துண்டிக்கும் கொடூர காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இந்த படுகொலை சம்பவம் ஈராக்கில் எந்த பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 97 வயதில் ஹைஸ்கூலை முடித்த அமெரிக்கப்பாட்டி…!!
Next post இருட்டில் பல் துலக்கினால் நன்றாக தூக்கம் வரும்: நிபுணர் தகவல்…!!