சீனாவில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி…!!
Read Time:1 Minute, 21 Second
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் வெய்வுடு என்ற இடத்தில் 2 மாடி கட்டிடம் ஒன்றின் அஸ்திரவாரத்தில் நேற்று முன்தினம் புனரமைப்பு பணிகள் நடந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 17 கட்டுமான தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து, விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. படுகாயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு, லுயோஹீ நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் உயிருடன் சிக்கி தவிக்கின்றனரா என தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Average Rating