இரண்டாவது மனைவி தகாத உறவில் ஈடுபடுவதை கண்ட 60 வயது கணவன் தற்கொலை..!!

Read Time:1 Minute, 48 Second

downloadதனது இரண்டாவது மனைவி தகாத உறவில் ஈடுபட்டதை கண்ட கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பு கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் இடம்பெற்றுள்ளது.

60 வயதுடைய நேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று மாலை 6 மணியளவில் வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய போது தனது இரண்டாவது மனைவி தகாத உறவில் ஈடுபட்டதை கண்டுள்ளார்.

இதனையடுத்த மனமுடைந்த குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் முன்னர் ஒரு திருமணம் செய்து இரு பிள்ளைகள் உள்ள நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் வேறொரு பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தவர். இத் திருமணத்தில் பிள்ளைகள் இல்லை.

இந்நிலையில் குறித்த தினத்தில் அவர் வீடு திரும்பிய நிலையில் தனது மனைவியின் தகாத நடத்தையை கண்டு அவர் நஞ்சருந்தியதாக தெரியவருகிறது.

மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேததனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொக்கடிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொண்டையில் உணவு சிக்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறல்: பரிதாபமாக பலியான 7 வயது மாணவி…!!
Next post கராபிட்டிய வைத்தியசாலை ஊழியரின் சடலம் கண்டுபிடிப்பு…!!