சிறுமியைக் காணவில்லை : கொடிகாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!
Read Time:1 Minute, 2 Second
கொடிகாமம், பாலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த குணரட்ணம் சஞ்சீவினி (வயது 15) என்ற சிறுமியை, நேற்று முதல் காணவில்லையென சிறுமியின் உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயார் சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத் தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற நிலையில் சிறுமியும் அவரது சகோதரரும் தந்தையுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தானும் வீட்டை விட்டுச் செல்லவுள்ளதாக சிறுமி அடிக்கடி கூறி வந்துள்ளார்.
முறைப்பாட்டின்படி கொடிகாம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating