85 வயதிலும் திருட்டை விடாத அமெரிக்கப் பாட்டி…!!
தனது திருட்டுத் தொழிலால் இரண்டு கண்டங்களில் பிரபலமடைந்த டோரிஸ் பைன்(85) என்ற மூதாட்டியை அமெரிக்க போலீசார் வைரத் தோடுகளை திருடிய வழக்கில் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.
இவர் பணக்கார பெண்ணாக வேடமிட்டு பெரிய நகைக்கடைகளில் கடைக்காரர்கள் அசரும் நேரத்தில், நகை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். தனது இருபத்து மூன்று வயதில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இருபத்து இரண்டாயிரம் டாலர்கள் மதிப்புள்ள வைரத்தைத் திருடியதற்காக முதல் முறையாக கைது செய்யப்பட்டார்.
பல்வேறு திருட்டுப் புகார்களில் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிடிபட்டதை விட அதிகமாகவே திருட்டில் ஈடுபட்டிருக்கக் கூடும் என போலீசார் நம்புகின்றார்.
கடந்த 2013-ம் ஆண்டு தன்னைப் பற்றிய ‘த லைப் அண்டு கிரைம்ஸ் ஆப் டோரிஸ் பைன்’ என்கிற ஆவணப் படத்தில் நடித்த டோரிஸ் ‘நான் திருடியதற்காக என்றும் வருத்தப்பட்டதே இல்லை. மாறாக, திருடியபோது பிடிபட்டிருக்கக் கூடாது என்று வருத்தப்படுகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்திய மதிப்பில் சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகையை திருடிய வழக்கில் கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating