ராயபுரத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார்…!!

Read Time:2 Minute, 20 Second

c2998cd6-0bca-45b2-8270-1d46b9b54304_S_secvpfராயபுரம் முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி பிரேமகுமாரி.

இவர் நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ராயபுரம் வடக்கு மாதா கோவில் தெரு வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் பிரேமகுமாரியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். உடனே பிரேமகுமாரி கூச்சல் போட்டார்.

அங்கு நின்ற மக்கள் அந்த வாலிபரை விரட்டினர். அப்போது கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிள் கீழே சரிந்தது.

இதில் மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்த புதுவண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த மகேஷ் (20) என்பவன் பிடிபட்டான். பின்னால் அமர்ந்து பயணம் செய்தவன் 7 பவுன் நகையுடன் தப்பி ஓடி விட்டான்.

பிடிபட்ட மகேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய அவனது கூட்டாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்போரூர் அருகே உள்ள மானாம்பதி பஜாரில் சுமன் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு அருகில் ருக்மணி என்பவர் மளிகை கடை வைத்திருந்தார். இன்று காலை இந்த கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொள்ளை எதுவும் நடைபெறவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது போலீசார் ரோந்து வந்ததால் கொள்ளையர்கள் தப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் பல லட்சம் பொருட்கள் தப்பின.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதே வீதியில் அடகு கடையை உடைத்து 145 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிலையாக இருந்தாலும் பணத்தைத் திருட நினைத்தால் இதுதான் கதி: வீடியோ இணைப்பு…!!
Next post லாரி மோதி தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலி: தந்தை உயிர் தப்பினார்…!!