வியட்னாம் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் -சி.வி சந்திப்பு…!!
Read Time:1 Minute, 27 Second
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் மடான் ஃபான் கியு து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு இன்று முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வடக்கு முதல்வர் தெரிவிக்கையில்,
போருக்குப் பின்னர் எவ்வாறு புனருத்தாரணம் செய்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பில் கேட்டபோது,
தீர்மானத்தை உடனே எடுக்க வேண்டிய குணாதிசயம் இருக்க வேண்டும். அந்த விதத்திலே தங்களுடைய குறிக்கோள்களை நோக்கி முடிவுகளை எடுத்ததாக வியட்னாம் தூதுவர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
Average Rating