பொலிஸாரின் தாக்குதலை கண்டித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…!!
Read Time:51 Second
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடனுமான ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
கங்கொடவில ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து இந்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 1.30 அளவில ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 29ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating