பிஞ்சு குழந்தையை பக்கெட்டுக்குள் அடைத்து வைத்த தந்தை: நல்வழிப்படுத்தவே செய்ததாக வாதம் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 9 Second

father_in_israel_002-615x332பிஞ்சு குழந்தையை பக்கெட்டுக்குள் அடைத்து வைத்து தண்டித்த தந்தை, தமது குழந்தையை நல்வழிப்படுத்தவே என வாதிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் Abu Gosh எனும் நகரில் குடியிருந்து வரும் தந்தை ஒருவர் தமது பிஞ்சு குழந்தையை பக்கெட்டுக்குள் அடைத்து வைத்து தண்டித்த வீடியோ பதிவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
காற்றுபுகாத அந்த பக்கெட்டில் அடைக்கப்பட்ட குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாமல் அந்த தந்தை குழந்தையின் தலையை பக்கெட்டுக்குள் திணிப்பது பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பக்கெட்டுக்குள் அடைக்கப்பட்ட குழந்தையை அந்த தந்தை சுமந்துகொண்டே வீட்டுக்குள் வலம் வருவதை அதன் மூத்த சகோதர சிறுவன் அச்சத்துடனே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஒரு நாளேடு, அந்த குழந்தையை மிரட்டும் பொருட்டு, கசாப்புக்கடையில் ஒப்படைக்க இருப்பதாக அந்த தந்தை கூறியதாக தெரிவித்துள்ளது.

இணையத்தில் வெளியான இந்த வீடியோ பதிவைக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள இஸ்ரேல் பொலிசார், உடனடியாக அந்த தந்தையை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும், ஒரு தந்தையின் கடமையை மட்டுமே செய்துள்ளதாகவும் பொலிசாரிடம் பெயர் வெளியிடப்படாத அந்த தந்தை வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபாவளி கொடுப்பனவு எங்கே? ஆர்ப்பாட்ட களத்தில் மலையக மக்கள்…!!
Next post படுக்கையில் ஆண்கள் சிறந்து நீடித்து செயல்பட பீர் எப்படி உதவுகிறது தெரியுமா…?