நீதியமைச்சர் விஜயதாச யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்…!!
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கொழும்பிலிருந்து பலாலி இராணுவ படைத்தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்கிருந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதன்போது இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் உடன் சென்றிருந்தார்.
மேலும், நண்பகல் 12 மணியளவில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ் நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
அங்கு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
தேர்தல் காலத்தில் மக்கள் கருத்துக்களைப் பெற்று வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக, யாழில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், சமூக அமைதியைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களை வகைப்படுத்தி குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு,
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அவசர அழைப்பின் பேரில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating