திருமணம் செய்துகொள்ளவிருந்த காதல் ஜோடி விமான விபத்தில் பலியான சோகம்…!!
ரஷ்ய விமான விபத்தில் திருமணம் செய்துகொள்ளவிருந்த காதல் ஜோடியும் பலியான விஷயம் தெரியவந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 29 வயது ரோமனும், 27 வயது டாடியானாவும் நீண்ட நாட்களாக காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் விதி வேறுவிதமாக முடிவு செய்திருந்தது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சில நாட்களுக்கு முன்பாக எகிப்தின் சினாய் பகுதியில் விபத்துக்குள்ளான மெட்ரோஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ரோமன், டாடியானா இருவரும் பரிதாபமாக பலியானார்கள். அன்பு மகன் ரோமனை இழந்து சூன்யமாகிவிட்ட தங்களின் எதிர்காலத்தை நினைத்து கலக்கத்துடன் இருக்கும் ரோமனின் வயதான பெற்றோர், மாஸ்கோவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் தனது மகனின் உடலை அடையாளம் காட்டுவதற்காக, இரண்டு நாட்களாக கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.
முன்னதாக, 224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற மெட்ரோஜெட் ஏர்லைன்ஸ் விமானம் (ஏ–321 ஏர் பஸ்), சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில், 224 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating