போதையில் போட்டுக்கொண்ட ரேபான் கண்ணாடி டாட்டூவை 2 ஆண்டுகள் கழித்து நீக்கிய நபர்…!!
Read Time:1 Minute, 25 Second
அதீத குடிபோதையில் ரேபான் கண்ணாடி போன்ற டாட்டூவை தான் விரும்பிப் போட்டுக்கொண்டது தெரியாமலிருந்த நபர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் லேசர் சிகிச்சை மூலமாக அதனை நீக்கியிருக்கிறார்.
வேல்ஸ் நாட்டின் ஸ்வான்சீ நகரில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாக குடித்த அடுத்த நாள் போதை தெளிந்து முகத்தில் ரேபான் கண்ணாடி வரைந்திருப்பதைப் பார்த்து முதலில், மார்க்கர் பேனாவால் கிறுக்கிக்கொண்டதாக நினைத்தார்.
சோப்பு போட்டு முகத்தைக் கழுவிப்பார்த்தும் வரைந்தது போகவில்லை. இதன்பின்னரே அது ஒரு நிரந்தர டாட்டூ என்பதை உணர்ந்தார்.
சமீபத்தில் இப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தான் ஏற்கனவே குத்தியிருந்த நிரந்தர டாட்டூவை லேசர் சிகிச்சையின் மூலம் நீக்கியதை இவர் அறிந்தார். தற்போது தனது டாட்டூவையும் ஆறு லேசர் சிகிச்சை மூலமாக நீக்கிக் கொண்டுள்ளார்.
Average Rating