நேபாளத்தில் மலையிலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி…!!
நேபாளத்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியானதாகவும், 35 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
நேபாள அரசின் உயர் அதிகாரி சிவராம் கேலால் தெரிவித்துள்ள தகவல்படி, செவ்வாய் கிழமை அன்று கிழக்கு நேபாளத்தில் ராம்சே கிராமத்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைப் பாதையில் சென்ற பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து 500 அடி பள்ளத்தில் விழுந்ததில், அதில் பயணித்த 30 பயணியள் பலியானர்கள், மேலும் 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிராம மக்கள் காவல்துறையினருடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
விபத்து நடந்த பகுதியானது நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நேபாளத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பேருந்தின் கூரை மீது அமர்ந்து பயணித்தது தெரியவந்துள்ளது. மேலும் நேபாளத்தில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் மோசமான நிலையில் இருக்கும் வாகனங்களும், சாலைகளும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating