புளொட் முக்கியஸ்தர்கள் ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு

Read Time:1 Minute, 22 Second

புளொட் அமைப்பின் நோர்வே அமைப்பாளரான ராஜன் மற்றும் புளொட் முக்கியஸ்தர் சுரேஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்றுபகல் ஜே.வி.பியின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சமகால அரசியல் தொடர்பாகவும், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நிலைப்பாடுகள் பற்றியும், சமாதான நடவடிக்கைகளில் சர்வதேச பங்களிப்பின் தாக்கங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது ஜே.வி.பியினரால், பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை புளொட் தரப்பினரால் சமஷ்டிமுறை ஒன்றிலான தீர்வு பற்றிய நிலைப்பாடும் ஜே.வி.பியினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இச்சந்திப்பில் ஜே.வி.பியின் சார்பாக அதன் பிரச்சாரச் செயலர் விமல்வீரவன்சவும், அதன் தொழிற்சங்கச் செயலர் வசந்த விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதுமையில் தனிமை பெண்களுக்கு சந்தோஷமே!!
Next post ராமர் பிறந்தது கி.மு., 5114, ஜன.10ல் என்கிறார் நிபுணர்