ஓமலூர் அருகே 3 வருடங்கள் காத்திருந்து காதலியை கரம் பிடித்த வாலிபர்…!!

Read Time:7 Minute, 1 Second

68111eaa-a36c-4f1a-834a-c632c7b5c558_S_secvpfஓமலூரை அடுத்த தாராபுரம் காளியம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மகள் பிரியா (20) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சூர்யா (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களாக பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இவர்களின் காதல் விவகாரம் சூர்யா வீட்டிற்கு தெரிந்து அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரியாவிற்கு அவர்கள் வீட்டில் காமலாபுரம் பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் முருகேசன் என்ற நெசவு தொழிலாளிக்கு திருமண ஏற்பாடு செய்தனர், அப்போது காதலன் நீ வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் பத்து நாட்கள் கழித்து எங்கள் வீட்டில் சமாதானம் செய்து உன்னை வந்து கூட்டி செல்கிறேன் என்று கூறியதால் அந்த மாப்பிள்ளையை பிரியா திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.

திருமணமாகி சில காலத்திலேயே மீண்டும் காதலன் சூர்யா காதலி வீடான காமலாபுரம் பல றை சென்று அங்குள்ள ஏரி பகுதியில் காதலி பிரியாவுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இவர்களின் சந்திப்பு பிரியாவின் கணவரான முருகேசனுக்கு தெரிந்து நீ அவன் கூடவே போ என கூறி அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

இதனால் என்னுடைய வாழ்க்கையை கெடுத்த என்னுடைய காதலனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என கூறி காதலன் வீட்டு முன்பு கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் தர்ணா போராட்டம் செய்தார். இது தொடர்பாக ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சாட்சிகள் உறுதி படுத்தப்படாததாலும் மற்றொரு திருமணம் செய்து கொண்டதால் சட்டப்படி விவாகரத்து வாங்காததாலும் அப்போது இருவரையும் பிரித்து வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 29–10–2014 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் சூர்யா அவரது வீட்டிற்குள் நுழைந்து உள்ளே இருவரும் உல்லாசமாக இருந்த போது பிரியாவின் தந்தை மணி இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து வீட்டை திறந்து பார்த்த போது அங்கிருந்து தப்ப முயன்ற சூர்யாவை கயிற்றால் கட்டி வைத்து விட்டு ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு காலையில் வந்த போலீசார் கட்டிவைத்திருந்த சூர்யாவையும் அவரது காதலி பிரியாவையும் மீட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

அப்போது காதலியை திருமணம் செய்ய காதலன் வீட்டு சார்பாக 1 வருடம் அவகாசம் கேட்டதாகவும், இதற்கு ஒப்புக்கொள்ளாத காதலி வீட்டில் 6 மாதம் அவகாசம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் இருவரையும் அவரவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மறுநாள் மாலை 5 மணிக்கு காதலன் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் காதலி பிரியா காதலன் சூர்யா வீட்டின் அருகில் சென்று மண்எண்ணையை தலையில் ஊற்றி கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர். தீயை அனைத்தனர். இந்த தீயில் காதலியின் புடவை மட்டும் தீ பற்றி எரிந்தது. உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் காயமின்றி காதலி பிரியா உயிர் தப்பினார். இது குறித்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி காதலி பிரியா மற்றும் காதலன் சூர்யா அவரது தாய் முத்துக்கடல்நதி, பாட்டி அலமேலு ஆகியோரை காவல் நிலையத்திற்கு கூட்டிசென்று விசாரணை நடத்தினர். இது குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரியா கொடுத்த புகாரின் பேரில் காதலன் சூர்யா அவரது தாய் முத்துக்கடல்நதி பாட்டி அலமேலு ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

அதன் பிறகும் சூர்யா தனது காதலி பிரியாவுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் தாராபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் இருவரையும் விசாரித்தனர். அப்போது காதலன் சூர்யா வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என தெரியவந்தது. இதையடுத்து அவரது பெற்றோர்களை அழைத்து விசாரித்தனர் அப்போது அந்த பெண் தேவையில்லை எங்களுடன் வந்தால் வரட்டும் இல்லையேல் எங்களுக்கு மகனே இவன் இல்லை என கூறினர்.

இதையடுத்து காதலர்கள் இருவரையும் பிரியாவின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை விவாகரத்து வாங்காமல் வாலிபருடன் போலீசார் அனுப்பி வைத்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஞானப்பல்லால் ஆன மோதிரத்தை காதலிக்கு அணிவித்து திருமண நிச்சயதார்த்தம்…!!
Next post தனது குழந்தையை 20000 ரூபாவுக்கு விற்ற தாய்…!!