மரம் வெட்டிய பெண்; மின்சாரம் தாக்கிப் பலி…!!
Read Time:1 Minute, 5 Second
ஊவபரணகம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மரக்கிளையொன்று வெட்டிக்கொண்டிருந்த போது, மின்வடத்திலிருந்து மின்சாரம் தாக்கிய பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர்.
டவுன்சயிடி வத்த பகுதியைச் சேர்ந்த சரேய்மதி (49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிக மழை காரணமாக சரிந்து விழும் அபாயம் தெரிந்த மரத்தின் கிளையொன்றை வெட்டிக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்வடத்திலிருந்து மின்சாரம் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவபரணகம பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating