வித்தியா படுகொலையை விசாரிக்க நீதிபதிகள் குழு…!!

Read Time:1 Minute, 42 Second

Vidya_case-415x260புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை செய்ய நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்றிருந்த அவர் யாழ்.மேல்நீதிமன்றில் நீதிபதிகள், நீதிவான்கள், சட்டத்தரணிகளுன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட குற்றச் சம்பவம் பற்றிய பொலிஸ் விசாரணை நிறைவடையும் தறுவாயில் உள்ளது. அந்த வழக்கு விசாரிக்க நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு குறித்த வழக்கை விசாரிக்கும் என்றார்.

மரண தண்டனை விதிக்கப்படுகின்ற போதும் அது செயற்படுத்தப்படுவதில்லை. அந்தத் தண்டனையை மீள செயற்படுத்துவது பற்றிக் கேட்ட போது, அது பற்றி நாடாளுமன்றில் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பதிலளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா பத்தினியார் மகிழங்குளத்திலுள்ள இந்து மயானத்தில் பொலிசார் ஆயுதங்கள் தேடல்…!!
Next post செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடம்…!!