தென்கொரிய சாலைகளில் மழை நீரால் உயிர்பெறும் சுவரோவியங்கள்…!!
Read Time:1 Minute, 5 Second
இளம் கலைஞர்கள் கொண்ட குழு ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் சாலைகளுக்கு அழகூட்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள சில ஓவியர்கள் ‘பிராஜக்ட் மான்சூன்’ என்கிற பெயரில், நீர்பட்டால் மட்டும் வண்ணத்தை வெளியே காட்டும், ஹைட்ரோமேட்டிக் பெயிண்டைப் பயன்படுத்தி சாலைகளில் வரைந்துள்ளனர்.
மூன்று வாரங்களுக்கு தொடர்மழை பெய்யும் இப்பகுதியில், மழைக்காலத்தை மேலும் அழகுபடுத்தும் விதமாக, இந்த வேலையில் இறங்கினர்.
இந்த ஓவியங்கள் தென்கொரியாவின், கலாச்சாரத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் நதிகளின் அழகை பறைசாற்றுவதாக உள்ளது. இந்த ஓவியர்கள் பல்வேறு பரிசுகளைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating