ஆழ்வார்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது…!!

Read Time:1 Minute, 51 Second

bdae38a6-168b-4df6-a06d-10ec7d43507f_S_secvpfசென்னை ராதா கிருஷ்ணன் சாலை, ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகில் நேற்று இரவு இரண்டு கார்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேனாம் பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று காரில் இருந்த 11 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களில் 5 பேர் கல்லூரி மாணவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. காரில் இருந்த 3 பட்டா கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவனின் கூட்டாளிகளான ஜெயக்குமார், தேவராஜ், பிரதீப், சந்தோஷ் ஆகியோரும் காரில் இருந்தனர்.

இவர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர்கள் 5 பேரும் தாம்பரத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை நிலத்தகராறில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

கைதான அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

தாம்பரம் ரவுடி தூண்டுதலின் பேரில் பிடிபட்ட அனைவரும் தாம்பரத்துக்கு சென்று அங்கு நிலம் ஒன்றை அத்துமீறி ஆக்கிரமிக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக முக்கிய பிரமுகரை தீர்த்து கட்டவும் முடிவு செய்து இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தியாகராயநகரில் ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் மாயம்: ஊழியர்களிடம் விசாரணை…!!
Next post விபச்சார புரோக்கர் குண்டர் சட்டத்தில் கைது…!!