விபச்சார புரோக்கர் குண்டர் சட்டத்தில் கைது…!!
Read Time:1 Minute, 18 Second
சென்னைக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களை சிலர் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் இளம் பெண்ணை வைத்து விபச்சாரம் நடத்தியதை கண்டு பிடித்தனர். போலீசார் அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
விபச்சார தொழில் நடத்தி வந்த பிரபல விபசார புரோக்கர் ராஜா முகமதுவை கைது செய்தனர். அவர் ஏற்கனவே விபச்சார வழக்கில் 3 முறை கைதாகி சிறை சென்றவர் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் விபச்சார புரோக்கர் ராஜா முகமதுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Average Rating