பச்சோரி மீது பாலியல் புகார் கூறிய ஆராய்ச்சி மாணவி ராஜினாமா…!!

Read Time:1 Minute, 59 Second

b4c69f79-15c8-4d29-8ac2-e6955958dccd_S_secvpfசுற்றுச் சூழல் ஆர்வலர் பச்சோரி மீது பாலியல் புகார் கூறிய ஆராய்ச்சி மாணவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் நிறுவனத்தில் (தேரி) பருவநிலை மாறுதல் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் மாணவி ஒருவர், அதன் தலைமை இயக்குனரும் பிரபல சுற்றுச் சூழல் ஆர்வலருமான ராஜேந்திர பச்சோரி மீது பாலியல் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் டெல்லி போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பச்சோரிக்குப் பதில் அஜய் மாத்தூர், தேரி தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பச்சோரி மீது பாலியல் புகார் கூறிய ஆராய்ச்சி மாணவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது கடிதத்தில் தேரி நிர்வாகம் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், பச்சோரி மீதான வழக்கை கையாளும் விதம் சரியில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பச்சோரி மீது கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு பிரிவுகளில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டபோதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பச்சோரியின் முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த அந்த மாணவியின் மனுவும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை பதிவு திருமணம் செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர்…!!
Next post தாயின் கல்லறையை உணவு மேஜையாக மாற்றிய மகன்: பொதுமக்களுக்கும் அழைப்பு…!!