மகனை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண்ணுக்கு விளக்கமறியல்..!!
Read Time:1 Minute, 13 Second
தனது ஆறு வயதுடைய மகனை ரயில் தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் கண்டிய சேர்ந்த பெண்ணை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்டி பிரதான நீதவான் முன் சந்தேக குறித்த பெண்ணையும் அவரது மகனையும் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்திலே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த ஆறு வயதுடைய சிறுவனை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று 36 வயதுடைய குறித்த பெண் கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் தனது மகனை ரயில் தள்ளி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
பின்னர் அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த சிறுவனை காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Average Rating