தென்னை ஓலையினால் வேயப்பட்ட வீடுகளுக்கு மின்சாரம்..!!
Read Time:1 Minute, 12 Second
தென்னை ஓலையினால் வேயப்பட்ட வீடுகளுக்கு எதிர்காலத்தில் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவரது அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக ஏதேனும் வகையில் உறுதிப்படுத்தப்படும் இடத்தில் உள்ள வீடுகளுக்கும் மின்சாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, மின்சார சபையில் இணைந்து பணிப்புரியம் 2 ஆயிரத்து 367 மனித வள பணியாளர்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் மின்சார சபையின் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
Average Rating