ஜனாதிபதி நாடு திரும்பினார்…!!

Read Time:1 Minute, 18 Second

maithripala-sirisenaதாய்லாந்துக்கான 4 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு தாயகம் திரும்பினார்.

சிறிலங்கன் வானூர்தி சேவைக்குச் சொந்தமான யு.எல்.883 வானூர்தியில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் தாய்லாந்து நோக்கி சென்ற நிலையில், அவர்களை தாய்லாந்தின் துணை பிரதமர் ஜொன் – கிபி டிடக் வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தாய்லாந்து பிரதமருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை, ஜனாதிபதி நேற்று தாய்லாந்தின் முடிக்குரிய இளவரசி மகா சக்ரி சிறின்டோனையும் சந்தித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்…!!
Next post குளிர்பான பிரியரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து…!!