இரவு விடுதி தீ விபத்தில் 132 பேர் பலி: ருமேனியா பிரதமர் ராஜினாமா…!!
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ருமேனியா நாட்டின் பிரதமராக விக்டோர் பாண்டா பதவி வகித்து வந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அதை தொடர்ந்து சமீபத்தில் ருமேனிய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அவர் வெற்றி பெற்றார். இருந்தாலும் அவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தலைநகர் புகாரெஸ்ட் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 132 பேர் பலியாகினர். 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட விடுதிக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதால் தான் தீ விபத்து ஏற்பட்டது என கருதப்படுகிறது.
எனவே பிரதமர் விக்டோர் பாண்டா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நேற்று புகா ரெஸ்ட்டில் பொதுமக்கள் கண்டன பேரணி நடத்தினார்கள். இப்போராட்டத்தில் மொத்தம் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதனால் பணிந்த பிரதமர் விக்டோர் பாண்டா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating