77 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய ராணியின் ஆசை: மக்கள் புடைசூழு பயணித்த “இதயம்”…!!
ருமேனியா நாட்டின் ராணி இறந்து 77 ஆண்டுகள் கடந்த பின்னர் அவரது இதயம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் ஆல்பிரட்டின் மகள் மேரி, ருமேனியா நாட்டின் முதலாம் பெர்டினான்டை மணந்து கொண்டு அந்நாட்டின் ராணியானார்.
1938 ஆம் ஆண்டு மரணமடைந்து ராணிக்கு, தனக்கு மிகவும் பிடித்த கோடைகால இல்லம் அமைந்துள்ள பாலிசிக் நகரில் சிறிய ஆலயம் கட்டி தனது இதயத்தை அடக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நகரம் பல்கேரியாவுக்கு சொந்தமானது என்பதால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது.
இதனால், இவரது இதயம் ருமேனியாவில் உள்ள தேசிய அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், ராணியின் இதயத்தை அரண்மனையுடன் தொடர்புடைய இதயத்திற்கு மாற்ற வேண்டும் என அரச குடும்பத்தார் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர் இறந்து 77 ஆண்டுகளுக்கு பின்னர், சிறிய வெள்ளி பெட்டியில் வைத்து பிரித்தானியா மற்றும் ருமேனியா நாட்டின் கொடிகளுடன் ராணுவவீரர்கள் பாலிசிக் நகரிற்கு எடுத்துச்சென்றனர்.
இதில் ராணியின் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Average Rating