அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 4 பேரை கத்தியால் குத்திய மாணவர் சுட்டுக்கொலை…!!
Read Time:1 Minute, 0 Second
அமெரிக்காவில் உள்ள வடக்கு மத்திய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் கத்தியை எடுத்து போவோர் வருவோரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
பல்கலைக்கழக பாதுகாப்பு போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த மாணவரை சுட்டு வீழ்த்தினார்கள். இதில் அவர் உயிரிழந்தார். காயமடைந்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுடைய நிலைமை என்ன என்று தெரியவில்லை.
கத்தியால் குத்திய அந்த மாணவர் பற்றிய விவரங்களையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை. அவருக்கு 20 வயது இருக்கும் என்று தெரிகிறது.
Average Rating