புரசைவாக்கத்தில் மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியை மீது புகார்…!!
Read Time:1 Minute, 3 Second
எழும்பூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் தினேஷ் (12). புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று தினேஷ் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்றதாக தெரிகிறது. அவரை ஆசிரியை பிரம்பால் அடித்தார். இதில் மாணவரின் கையில் வீக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவரை அவரது பெற்றோர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி மாணவரின் தாயார் ஸ்ரீதேவி கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating