புரசைவாக்கத்தில் மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியை மீது புகார்…!!

Read Time:1 Minute, 3 Second

046cf84a-32d3-444e-9e80-48ebda07bcb8_S_secvpfஎழும்பூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் தினேஷ் (12). புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று தினேஷ் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்றதாக தெரிகிறது. அவரை ஆசிரியை பிரம்பால் அடித்தார். இதில் மாணவரின் கையில் வீக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து மாணவரை அவரது பெற்றோர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி மாணவரின் தாயார் ஸ்ரீதேவி கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது பேத்தியிடம் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியைக் கொடுத்து, பாலைவனத்தில் தனியாக தவிக்க விட்டுவந்த தாத்தா…!!
Next post பூட்டிய வீட்டில் போக்குவரத்து ஊழியர் மர்மச்சாவு…!!