பூட்டிய வீட்டில் போக்குவரத்து ஊழியர் மர்மச்சாவு…!!
Read Time:1 Minute, 4 Second
தண்டையார்பேட்டை முருகேசன் தெருவில் வசித்து வந்தவர் தவிடன் (வயது 54). தண்டையார்பேட்டையில் உள்ள மாநகர பஸ் டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
இந்த நிலையில் பூட்டிக்கிடந்த தவிடன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்டையார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கையில் தவிடன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating