பூட்டிய வீட்டில் போக்குவரத்து ஊழியர் மர்மச்சாவு…!!

Read Time:1 Minute, 4 Second

66acb9d5-7441-423f-991b-795fab89df4e_S_secvpfதண்டையார்பேட்டை முருகேசன் தெருவில் வசித்து வந்தவர் தவிடன் (வயது 54). தண்டையார்பேட்டையில் உள்ள மாநகர பஸ் டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

இந்த நிலையில் பூட்டிக்கிடந்த தவிடன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்டையார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கையில் தவிடன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புரசைவாக்கத்தில் மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியை மீது புகார்…!!
Next post சீர்காழி அருகே உப்பனாற்று பாலம் உடைந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!