மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு..!!
Read Time:57 Second
மட்டக்களப்பு, திருப்பெருந்துறையில் 16 வயது இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருப்பெருந்துறை அன்னை வேளாங்கன்னி வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 5ம் திகதி வீட்டிலிருந்து சென்ற இவ் இளைஞன் வீடு திரும்பாத நிலையில் இன்று கிணற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த இளைஞர் மனவளர்ச்சி குன்றியவர் என பிரதேச கிராம சேவை அதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating