அக்கரைப்பற்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!
Read Time:54 Second
அக்கரைப்பற்று – ஜூம்மா பள்ளி வீதியின் அட்டாளைச்சேனை-3 பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டு கூரையில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் உதவியுடனேயே அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating