பெனாசிர் பேரணியின் போது கைக்குழந்தை உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்கச் செய்யப்பட்டதா?

Read Time:1 Minute, 58 Second

பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி பெனாசிர் தன் தந்தை பூட்டோவின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாக சென்றபோது, குண்டு வெடித்தது. இதில் 140 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் கைக்குழந்தை உடலில் வெடிகுண்டை கட்டி, அதை வெடிக்கச்செய்ததன் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி, அதை ஒருவன் தூக்கி வந்தான். அதை அவன் பெனாசிரிடம் கொடுக்க முயன்றான். அது முடியாதபோது பெனாசிர் இருந்த குண்டு துளைக்காத வாகனத்தில் இருந்த மற்ற தலைவர்களில் யாராவது ஒருவரிடம் கொடுக்கவும் அவன் முயன்றான். குழந்தையுடன் அவனை பார்த்த பெனாசிர் தன் அருகே வருமாறு அவனை அழைத்தார். ஆனால் அவனது அசாதாரண நடவடிக்கையை பார்த்து சந்தேகம் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவனை பெனாசிரின் வாகனத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கவில்லை என்று ஒரு போலீஸ்காரர் தெரிவித்தார். பெனாசிரை நெருங்க முடியாத அவன் தான் கையில் இருந்த குழந்தையின் உடலில் கட்டிஇருந்த குண்டை கூட்டத்துக்குள் வெடிக்கச்செய்து இருக்கவேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தகவலை நிïஸ் என்ற அந்த நாட்டு ஆங்கில பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார்
Next post மீண்டும் மன்மத ராணி சாயா சிங்!!!