தெற்கு சூடான் விமான விபத்தில் உயிர் பிழைத்த 13 மாத குழந்தை…!!
பயணிகளும், 6 சிப்பந்திகளும் பயணம் செய்வதாக விமானம் புறப்படும் முன்பு விமானி கட்டுப்பாட்டு அறையில் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே இந்த கோர விமான விபத்தில் 13 மாத குழந்தையும், ஒரு ஆணும் உயிர் பிழைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. அக்குழந்தையின் பெயர் நியாலூ.
இவளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலையின் முன் பகுதியில் அடிபட்டுள்ளது. விபத்தில் இவளது தாயாரும், அக்காவும் இறந்து விட்டனர். இவர்கள் ஜூபாவில் இருந்து தங்களது சொந்த ஊரான பலோச்சுக்கு சென்றனர். இந்த தகவலை அவளது தந்தை தெரிவித்தார்.
விபத்தில் உயிர் பிழைத்த ஆண் நபரின் அரவணைப்பினால் தான் குழந்தை நியாலு காயத்துடன் தப்பி இருக்கிறாள். தலை, கைகள், மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் தப்பிய ஆண் நபர் குழந்தை நியாலுவுக்கு கேடயம் போன்று பாதுகாப்பாக இருந்துள்ளார்.
விமானம் விழுந்த இடத்துக்கு டி.வி. நிருபர் அகோல் டெங் என்பவர் முதன் முதலாக சென்றார். அங்கு அவர்தான் குழந்தை நியாலும், ஆண் நபரும் உயிருடன் இருப்பதை பார்த்தார். பின்னர் மற்றவர்களின் உதவியுடன் அவர் குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.
Average Rating