நம்பியூர் அருகே பெண் டெய்லர் கற்பழித்து கொலை…!!
Read Time:1 Minute, 17 Second
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இளம் பெண்ணின் உடலை மீட்டனர். அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவரை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் யார்? என போலீசார் விசாரித்தனர். அவர் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரா நகர் காலனி ஆறுமுகம் என்பவரது மகள் ரம்யா (வயது 18) என தெரிய வந்தது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ரம்யா நம்பியூரில் உள்ள உள்ளாடை (துணி) கம்பெனி ஒன்றில் டெய்லரிங் வேலை பார்த்து வந்தார்.
அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating