கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது…!!
Read Time:1 Minute, 0 Second
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேச கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பெருந்துறை அன்னை வேளாங்கன்னி வீதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாம் திகதி குறித்த பிரதேச வீடொன்றில் இருந்து வெளியே சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில், அவர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating