நட்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் – பீல்ட் மார்ஷல்…!!
Read Time:1 Minute, 10 Second
நீதியமைச்சர் விஜயதாசா ராஜபக்சவிடம் 5 ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடயில் இன்று இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பீலட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் நட்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்றைய தினம் அறிவித்ததற்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க செய்ய ஒன்றிணைந்து செயற்பட்ட இரண்டு தரப்பினரும் இன்று எவன்காட் சம்பவத்தை முன்னிறுத்தி இரு வேறு கருத்துக்களை முன்வைக்கின்றமை குறிப்பிடதக்கது.
Average Rating