மருதமுனையில் குதிரை ஓட ரூபா 100…!!
Read Time:1 Minute, 3 Second
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசமான மருதமுனையில் தற்போது குதிரை சவாரி ஆரம்பமாகியுள்ளது.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இப்பிரதேச கடற்கரையை ஒட்டி இச்சவாரி இடம்பெறுகின்றது.
நாளுக்கு நாள் இப்பிரதேச கடற்கரைக்கு வெளியிடங்களில் இருந்து மக்கள் உல்லாசமாக ,பொழுது போக்கிற்கு அதிகளவாக வந்து செல்கின்றனர்.
இவர்களது தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் இச்சவாரி அமைந்துள்ளது.பெரும்பாலும் இக்கடற்கரையை நாடி வரும் மக்கள் தங்களுடன் வரும் குழந்தைகளை குதிரை சவாரி செய்ய அனுமதிப்பதை அவதானிக்க முடிகின்றது.ஒருவருக்கு 100 ருபா வீதம் சவாரிக்கு அறவிடப்படுகின்றதாக அறிய முடிகின்றது.
Average Rating