தெருவீதியில் இளம் பெண்ணை அடித்து உதைத்த இளைஞர்: கண்டுகொள்ளாமல் நகர்ந்த பொதுமக்கள் (வீடியோ இணைப்பு)…!!
ஜன நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை அடித்து உதைப்பதை கண்டும் காணாதது போன்று பொதுமக்கள் நகர்ந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா நாட்டில் கடலோர பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தமருகே 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
நிலைகுலைந்து அந்த இளம் பெண் சரிந்து விழும் வரை தாக்கிய அந்த நபர் தெருவீதியில் அப்படியே விட்டுச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் நடப்பதை அப்பகுதியில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கெமராக்களில் பதிந்து அது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் பார்வையில் பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், சம்பந்தப்பட்ட இளைஞரை உடனே கைது செய்துள்ளனர்.
ஆனால் தாக்குதலுக்கு உள்ளான அந்த இளம் பெண்ணின் கோரிக்கையை ஏற்று அந்த நபர் மீது வழக்கு பதியாமல் விடுவித்துள்ளனர்.
இச்சம்பவம் நடக்கும்போது அந்த வழியே இளம் தாய் ஒருவர் தனது குழந்தையும் கொண்டு அந்த வழியே கடந்து சென்றுள்ளார்.
மேலும் அந்த பகுதியில் அங்கும் இங்கும் பொதுமக்கள் நடமாடியுள்ளனர், ஆனால் எவரும் இவர்களின் சண்டையை கண்டுகொள்ளவோ பொலிசாருக்கு தகவல் தரவோ முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating